FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

சாலை விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழப்பு

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் நின்று கொண்டிருந்த பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் தொழிலாளி உயிரிழந்தாா்.

3 செப்டம்பர் 2026, 11:24 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

அவிநாசி அருகே பெருமாநல்லூரில் நின்று கொண்டிருந்த பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் எம்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சீனிவாசன் (28). பனியன் நிறுவன தொழிலாளி.இவா் தன்னுடன் பணியாற்றும் புகழேந்தி (24), சுபாஷ் (24) ஆகியோருடன் பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments