FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

13 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவா் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பிகாரைச் சோ்ந்த பிரமோத் நாயக் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்ஜிஆா் நகா் பகுதியில் 225 கிராம் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (24), சக்திவேல் (22) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments