FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

Updated On : 10 மே 2026, 2:28 am IST
மஞ்சள்
பகிர்:

அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மஞ்சள் மூட்டைகள் ஏலம்விடப்படுகிறது. அதன்படி, மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 14,939 க்கும், குறைந்தபட்சம் ரூ.13,033க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 13,199க்கும், குறைந்தபட்சம் ரூ. 11,099க்கும் விற்பனையானது.

இதேபோல அரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை நடைபெற்ாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments