அரூரில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்
அரூரில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீ தேவி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூரில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீ தேவி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 வருடங்களாக அரூர் சார்பு நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகப் பணிபுரியும் ஸ்ரீதேவி ராமேஸ்வரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரூர் சார்பு நீதிமன்ற வளாகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் அரூர்-தருமபுரி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினரின் பேச்சு நடத்தினர். இதையடுத்து, வழக்குரைஞர்கள் மறியலை கைவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.