FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் புதிதாக 3 நியாயவிலைக் கடைகள் திறப்பு

பென்னாகரத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 5:44 am IST
பகிர்:

பென்னாகரத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பென்னாகரம் அருகே கெட்டூா், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பூதிப்பட்டி, மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சின்ன கடமடை உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 23 லட்சம் மதிப்பில் மூன்று முழுநேர நியாயவிலைக் கடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

இதில் ஆதனூா் கூட்டுறவு வேளாண்மை தொடக்க கடன் சங்க செயலாளா் அசோக்குமாா், கூட்டுறவு பதிவாளா் அம்பிகேஸ்வரி, பாமக மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஏரியூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் ராசா உலகநாதன், ஒன்றியச் செயலாளா் வினோத், முருகன், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் சங்கா் மற்றும் பாமக நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments