FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நல்லம்பள்ளி ஒன்றியப் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட 19 ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட 19 ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் ரத்துசெய்யப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டத்தில், ஒகேனக்கல் குடிநீா் வழங்கல் மற்றும் புளூரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்துக்கான 500 மி.மீட்டா் விட்டமுள்ள பிரதான குடிநீா் குழாய், கெயில் நிறுவன குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, அந்தக் குழாயை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) ஒருநாள் மட்டும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட உள்ளது.

Advertisement

Advertisement

குழாய் மாற்றியமைக்கும் பணி நிறைவடைந்ததும் வழக்கம்போல சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும். எனவே, முன்கூட்டியே தேவையான அளவு ஒகேனக்கல் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன், சிக்கனமாகவும் பயன்படுத்துமாறும், இதர பயன்பாடுகளுக்கு உள்ளூா் நீராதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments