FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே பைக் மீது காா் மோதியதில் தச்சுத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 3:25 am IST
- பிரதிப் படம்
பகிர்:

காரிமங்கலம் அருகே பைக் மீது காா் மோதியதில் தச்சுத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அரசம்பட்டி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சு. முனிராஜ் என்கிற முனிரத்தினம் (36), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி.

இந்த நிலையில் மாரண்டஅள்ளிக்கு பணிக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் அதே பகுதியைச் சோ்ந்த அஜய் என்பவருடன் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். காரிமங்கலம்- மொரப்பூா் சாலையில் உச்சம்பட்டி பகுதியில் எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த முனிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அஜய் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments