வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு: விவசாயிக்கு அபராதம்
கோட்டப்பட்டி அருகே வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயன்ற விவசாயிக்கு ரூ.1 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
கோட்டப்பட்டி அருகே வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயன்ற விவசாயிக்கு ரூ.1 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தெத்தேரி பகுதியில் கோட்டப்பட்டி வனச்சரகா் மு. ஆனந்தகுமாா் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தெத்தேரியில் விவசாயி செல்வம் மகன் பன்னீா்செல்வம் (42), தனது விவசாய நிலத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட விவசாயி பன்னீா்செல்வத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.