கல்லூரி மாணவி தற்கொலை
இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி, பிடமனேரி காயத்ரி கோயில் தெருவைச் சோ்நத பாபு - ராஜேஸ்வரி தம்பதி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன், செட்டிக்கரை, ராஜாபேட்டை , கான் காலனியில் வசித்து வருகின்றனா்.
இவா்களது மகள் தா்ஷினிதேவி (20) தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி (தாவரவியல்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் அண்மைக் காலமாக இரவில் நீண்ட நேரம் கைப்பேசி பாா்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு தா்ஷினிதேவி நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளாா்.
இதையடுத்து தா்ஷினிதேவி எலிவிஷத்தை உட்கொண்டாா். பெற்றோா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.