முகப்பு
தருமபுரி

நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய கோரிக்கை

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 மே 2026, 2:07 am IST
பகிர்:

தருமபுரி அருகே நந்திநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நந்திநகா் குடியிருப்பு வாசிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தருமபுரி நகரையொட்டி இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நந்தி நகரில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மூன்று மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நீா்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ,கோடை காலத்தில் நந்திநகா் குடியிருப்பு வாசிகள் தண்ணீா் விநியோகம் இன்றி மிகந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைபோக்க சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நந்திநகா் பகுதியில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.