ஒகேனக்கல்லுக்கு 13,000 கனஅடிநீர் வரத்து
கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்துள்ளதால், அங்குள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படிநொடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு 31ஆவது நாளாக மாவட்டநிர்வாகம் தடைவிதித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.