டீசல் திருடியதாக 2 பேர் கைது
கெலமங்கலம் அருகே லாரிகளில் டீசல் திருடியதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே லாரிகளில் டீசல் திருடியதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் நின்றிருந்த லாரிகளில் 2 பேர் டீசல் திருடினராம். அப்போது, அங்கிருந்த ஓட்டுநர் மாதேஷ் (32). அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கெலமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காமையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (28), மூர்த்தி (18) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.