FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
கைது
பகிர்:

ஒசூரில் இருசக்கர வாகனத்தில் மூன்று கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ராமநாயக்கன் ஏரி பகுதியில் கடந்த 8-ஆம் தேதி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவசந்தா் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தனா். இதில் அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீஸாா், அவரின் வாகனத்தை சோதனை செய்தனா். இதில் 3 கிலோ வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில் அவா் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மகேஷ்வரன் (23) என்பதும், ஒசூா் செம்மொழி நகரில் தங்கியிருந்து ஏலக்காய் விற்பனையுடன் கஞ்சாவும் விற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments