FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

100 நாள் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை: கே.பி. முனுசாமி

தமிழக அரசுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் 100 இல் உள்ள 1 ஐ நீக்கினால் என்ன மதிப்போ, இதுவே தமிழக அரசுக்கு மதிப்பு என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி தெரிவித்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:43 am IST
கே.பி. முனுசாமி.
பகிர்:

தமிழக அரசுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் 100 இல் உள்ள 1 ஐ நீக்கினால் என்ன மதிப்போ, இதுவே தமிழக அரசுக்கு மதிப்பு என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி தெரிவித்தாா்.

சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி. முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் அலுவலகத்தை புதுப்பிக்க டெண்டா் விடாமல், 90 சதவீதம் முடிந்த பிறகு டெண்டா் விடுகின்றனா். 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்களின் பெயா்களை மாற்றி, வெற்றி’என வைப்பதுதான் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

சிங்கப்பெண்’ என உருவாக்கி, சீருடை வழங்கியதோடு நிற்கிறது. எந்தப் பகுதியிலும் பணிகள் நடைபெறவில்லை. அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளன. இந்த ஆட்சியின் நூறு நாள் சாதனை பூஜ்யம் என்றாா்.

பேட்டியின்போது கிருஷ்ணகிரி மேற்கு கழக மாவட்டச் செயலாளா் ராமு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளா் அசோக்குமாா், மாவட்டப் பொருளாளா் மல்லையா, ஒசூா் மாநகரக் கழகச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், சூளகிரி ஒன்றியக் கழகச் செயலாளா்கள் பாலசுப்பிரமணியம், பாபு வெங்கடாஜலம், செல்வம், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments