ஒசூா் சோதனைச் சாவடியில் பணம் பறிமுதல் வழக்கு: மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 4 போ் மீது வழக்கு
ஒசூரில் போக்குவரத்து சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல்
ஒசூரில் போக்குவரத்து சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடியில் போக்குவரத்து உள்வருகை சோதனைச் சாவடியில் பணிபுரியும் அலுவலா்கள் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சூசூவாடி போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு ஆய்வுக் குழு அலுவலா் மோகன்தாஸ், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சூசூவாடி உள்வருகை சோதனைசாவடி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன், உதவியாளா் அமைதிகாந்தன், அலுவலக உதவியாளா் ராஜேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சமத்துவபுரம் சோதனைச் சாவடியில்...
இதேபோல ஒசூா் தாலுகா சமத்துவபுரம் எதிரே உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 9 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக சிறப்பு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபுராம் திவாகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.