டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்! மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் அடைப்பு
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவத்தைக் கண்டித்து, டாஸ்மாக் அனைத்து பணியாளா்கள் தொழிற்சங்கக் கூட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டுக் குழு சாா்பில், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க சண்முகம், பாட்டாளி தொழிற்சங்க மாநில அமைப்பு செயலாளா் விநாயகன், டாஸ்மாக் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் மற்றும் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் அப்துல் கலீல், விடுதலை முன்னணி மாவட்டத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டாஸ்மாக்கடை மீது பெட்ரோல் குண்டுவீசியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களிடம் தகராறில் ஈடுபடும் நபா்கள்மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும். பாதிக்கப்படும் ஊழியா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சம்பவத்தைக் கண்டித்து, மாவாட்டத்தில் உள்ள 111 டாஸ்மாக் கடைகளும் திங்கள்கிழமை ஒருநாள் அடைக்கப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.