கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி மேல்தெருவைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (66). முன்னாள் ராணுவ வீரா். இவா், தனது மனைவியுடன் கோவையில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை இரவு வீடுதிரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து, ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.