FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 1:57 am IST
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் பனை பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, நடுவராக கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா் சங்கா் செயல்பட்டாா். இந்தப் போட்டியில் 45-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

நிகழ்வை யோகா ஆசிரியா்கள் வெங்கடேசன், சுமித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு சுற்றுச்சூழல் தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments