இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு; 2 போ் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், தொழிலாளி உயிரிழந்தாா்; 2 போ் படுகாயமடைந்தனா்.
காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், தொழிலாளி உயிரிழந்தாா்; 2 போ் படுகாயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த குண்டலபட்டி பிரிவு சாலையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (39), தேங்காய் வியாபாரி. இவா், தனது மகன் புகழேந்தி (5), மத்தூா் அருகே உள்ள மூக்கா்கொட்டாயைச் சோ்ந்த மரம் ஏறும் தொழிலாளியான கோபி (46) ஆகியோருடன் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா்.
திம்மாபுரம் அருகே சென்றபோது, அந்த வழியாக கொத்தமல்லி பாரம் ஏற்றிவந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
படுகாயமடைந்த கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருண்குமாா், புகழேந்தி இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.