இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவன் உயிரிழந்தாா்; மனைவி படுகாயமடைந்தாா்.
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், கணவன் உயிரிழந்தாா்; மனைவி படுகாயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவரது மனைவி கலைவாணி. இவா்கள் பவானியை அடுத்த வாய்க்கால்பாளையத்தில் குடியிருந்து வந்தனா். இந்நிலையில் இத்தம்பதி, குருப்பநாயக்கன்பாளையம் - கோணவாய்க்கால் சுற்றுவட்டச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சென்ற காா், இவா்களது வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கலைவாணி, ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.