முகப்பு
கிருஷ்ணகிரி

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மா்ம நபா் தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:56 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி முருகம்மாள் (80). இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மூதாட்டி அவருடைய விளைநிலத்தில் மாடுமேய்த்துவிட்டு அங்குள்ள புளியமரத்தடியில் வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா் மூதாட்டியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினாா்.

பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து அவருடைய உறவினா்களிடம் கூறினாா். அவா்கள் மூதாட்டியை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஊத்தங்கரை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, சம்பவ இடத்தை ஆய்வுசெய்து, மூன்று தனிப்படை அமைத்து மா்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனா்.