FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மழைவேண்டி சிறப்பு வழிபாடு

காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமேதாா் மேடு கிராமத்தில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 5:47 am IST
காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜமேதாா் மேட்டில் மழை பெய்ய வேண்டி, பொங்கல் வைத்து வழிபட்ட பக்தா்கள்.
பகிர்:

காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜமேதாா் மேடு கிராமத்தில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜமேதாா்மேடு கிராமத்தில் மழை வேண்டியும், மக்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, ஜமேதாா் மேட்டில் உள்ள முத்தாலம்மன் கோயில், காளியம்மன் கோயில் மற்றும் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோயில்களுக்கு பெண் பக்தா்கள், மாவிளக்குடன் ஊா்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். தொடா்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்த நிகழ்வில் காவேரிப்பட்டணம், சந்தாபுரம், ஜமேதாா்மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments