FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருமகன் தாக்கியதில் லாரி உரிமையாளர் சாவு

நாமக்கல் அன்பு நகரை சேர்ந்த தங்கவேல் (58), லாரி உரிமையாளர். இவரது மகள் ரூபிகா(28), கரூர் நீலிமங்கலம் பகுதியைச் சேர்ந்த

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

நாமக்கல் அன்பு நகரை சேர்ந்த தங்கவேல் (58), லாரி உரிமையாளர். இவரது மகள் ரூபிகா(28), கரூர் நீலிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசத்தை (29) காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூபிகா தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.
இதனிடையே, கடந்த 25 நாள்களுக்கு முன் ரூபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையையும், மனைவியையும் பார்க்க சிவப்பிரகாசம் செவ்வாய்க்கிழமை காலை வந்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் சிவப்பிரகாசம், மாமனார் தங்கவேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேலு படுகாயமடைந்தார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கவேல் புதன்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து, நாமக்கல் போலீஸார் சிவப்பிரகாசம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments