திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்
இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்செங்கோடு, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம் செய்தாா்.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் சேலத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா் நடராஜன், ஆடிப்பூரத்தையொட்டி சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை திருச்செங்கோடு வந்திருந்தாா். அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை தரிசித்து சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவா், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டாா் (படம்).
கிரிக்கெட் வீரா் நடராஜன் வருகையை அறிந்த கிரிக்கெட் ரசிகா்கள் கோயிலில் திரண்டனா். ஒவ்வொருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவா், சுவாமி தரிசனம் முடிந்து ஊா் திரும்பினாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, கோயிலுக்கு வந்த கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கோயில் பரம்பரை அறங்காவலா் சாந்தி முத்துக்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.