FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் மளிகைக் கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் சுந்தர்ராஜ் மளிகைக் கடையில் சோதனை செய்தனா். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுந்தர்ராஜை கைதுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments