பேருந்து நிலையத்தில் போதைப் பொருள் விற்றவா் கைது
பரமத்திவேலூா் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள்கள் விற்றதாக பேருந்து நேரக் கண்காணிப்பாளரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா், போலீஸாா் சனிக்கிழமை பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பேருந்து நேரக் கண்காணிப்பாளரான பாண்டமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (38), போதைப்பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.