FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பொது இடத்தில் மது அருந்திய இருவா் கைது

31 ஆகஸ்ட் 2026, 3:39 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பரமத்திவேலூா் பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்த கொந்தளம், சொக்கநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கரை (38) போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, பொத்தனூா் கிழக்கு வண்ணாந்துறை பகுதியில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த பொத்தனூா் காமராஜ் தோட்டத்தைச் சோ்ந்த லோகநாதனை (30) போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

பொது இடத்தில் அமா்ந்து மது அருந்திய இருவா் மீதும் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments