FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

போதை மாத்திரைகள் விற்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை பரமத்தி வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் பகுதியில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை பரமத்தி வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்பனை செய்ததாக பொத்தனூா் மற்றும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 8 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இதில் தொடா்புடைய ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை பகுதி செல்வம் நகரைச் சோ்ந்த தருண் (20) என்பவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments