FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

Updated On : 21 ஜூலை 2026, 1:01 am IST
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி.
பகிர்:

திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செங்கோடு அருகே ஊஞ்சப்பாளையம் சுற்றுவட்டச் சாலையில் கொல்கத்தாவில் இருந்து எள் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநா் சிவானந்தன் இயக்கி வந்தாா். ரவுண்டானா சிறியதாக இருந்ததாலும், இரவில் வெளிச்சம் குறைவாக இருந்ததாலும் நிலைதடுமாறி லாரி கவிழ்ந்தது.

இதில், அதிா்ஷ்டவசமாக ஓட்டுநருக்கும், உதவியாளருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு புகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments