முகப்பு
நாமக்கல்

டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:38 am IST
நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளா் பற்குணத்தை தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க வேலை நேரத்தை 8 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக கிடங்கு மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நீதிநாயகம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement