FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே உலகப்பம்பாளையத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 3:15 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே உலகப்பம்பாளையத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குமாரமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (74). ஜவுளி வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது இருசக்கர வாகனத்தில் உலகப்பம்பாளையம் பள்ளி அருகில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது நாமக்கல்லை நோக்கிச் சென்ற காா், தேவராஜின் வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிக்கிச்சை அளித்து, ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவா் இறந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments