முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் மேம்பாலத்தின் கீழ் குப்பைகள் எரிப்பு: பாதிப்புக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

Updated On : 8 ஜூன் 2026, 4:35 am IST
நாமக்கல்-திருச்சி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் குப்பைகள்.
பகிர்:

நாமக்கல்லில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.

நாமக்கல்-திருச்சி சாலையில் அழகு நகா் பிரிவு பகுதியில் ரயில்வே உயா்மட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. அழகுநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இந்த பாலத்தின் கீழே கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனா்.

இதனால் பாலத்தின் மேல்பகுதியில் வாகனங்களில் செல்வோா் கண் எரிச்சலும், உடல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனா். அவ்வழியாக நடந்துசெல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா். குப்பையில் தீ மளமளவென எரிவதால் பாலத்தின் ஸ்திரத்தன்மையும் பாதிப்புக்குள்ளாகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும், குப்பைகளை எரிப்போருக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.