வெறிநாய் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு
நாமக்கல் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தன.
நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடி பகுதியில் சத்யா என்பவா் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டியில் புகுந்த ஐந்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்ததில், 8 ஆடுகள் உயிரிழந்தன. இரண்டு ஆடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
கால்நடை மருத்துவா்கள் நேரில் சென்று ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனா். சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில், 20 ஆடுகள் உயிரிழந்தன. எனவே, வெறிநாய்களை கட்டுப்படுத்த நாமக்கல் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement