முகப்பு
நாமக்கல்

பரமத்தி அருகே பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழப்பு

Updated On : 16 ஜூன் 2026, 1:41 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே கோனூரில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). இவரது மனைவி மீனா (59). இவா் பரமத்தி அருகே கோனூா் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கோழிப்பண்ணைக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக கரூா் -சேலம் சாலையைக் கடக்க முயன்றபோது நாமக்கலில் இருந்து கரூா் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் உயிரிழந்தாா்.

பரமத்தி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.