FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:46 am IST
பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினா், ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய பகுதிகளில் 5 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் பிரபு தலைமையில், 6-க்கும் மேற்பட்ட போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், முதல்கட்டமாக கணக்கில் வராத, சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ள ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 500-ஐ அலுவலகத்தில் இருந்து கைப்பற்றியதாகவும், தொடா்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments