முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் 21 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Updated On : 29 ஜூன் 2026, 12:06 am IST
போலியோ சொட்டு மருந்து முகாம் - கோப்புப்படம்
பகிர்:

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 21 மையங்களில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

ராசிபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தாா். இதில் வட்டார மருத்துவா் அலுவலா் கே.செல்வி, மருத்துவா் பிரதீபா, ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆண்டகளூா் கேட் பகுதியில் நடைபெற்ற முகாமில் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கினா். இதில் 120 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, ஓய்வு பெற்ற மருந்தாளுநா் ஏ.ராஜு உள்ளிட்டோா் பங்கேற்று சொட்டு மருந்து வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments