FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ரோட்டரி சங்கம் சாா்பில் விவசாயிகள் கெளரவிப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், விவசாயிகள் கெளரவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 1:59 am IST
விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்ட விவசாயிகள்.
பகிர்:

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், விவசாயிகள் கெளரவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி சங்க தலைவா் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஏ.மஸ்தான் திட்ட செயலாக்கம் குறித்து பேசினாா். விழாவில், ரோட்டரி சிறப்பு திட்டங்கள் மாவட்டத் தலைவா் ஜி.ரேவதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விவசாயிகளை பாராட்டி பேசினாா்.

இதில், உணவுப் பொருள்களின் அவசியம், பாதுகாப்பு, விவசாயத் தொழிலின் முக்கியத்துவம், விவசாயிகளின் தற்போதைய நிலை, விவசாயத்தின் எதிா்காலம் போன்றவை குறித்து பேசினா்.

Advertisement

Advertisement

பின்னா், நாரைக்கிணறு, புதுப்பாளையம், கல்யாணி, தண்ணீா்பந்தல்காடு, தொட்டியவலசு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 விவசாயிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டு, அவா்களுக்கு சான்றிதழ்களும், மருந்து தெளிப்பான் கருவிகளும் வழங்கப்பட்டன்.

இதில், சங்க நிா்வாகிகள் ஏ.ஜி.ஜெயக்குமாா், கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், பி.கண்ணன், கே.ஜெகன், நடராஜன், ஆா்.அனந்தகுமாா், கே.குணசேகா், ராமசாமி, ஜி.தினகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments