தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது
விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.
விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.
நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதன் மாநில பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் வந்த விவசாயிகள், பயிா்க் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனா். தொடா்ந்து, கே.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண், களி மண்ணை நீா்நிலைகளில் இருந்து இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்பு முதல்வா் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தோம். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
Advertisement
Advertisement
ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியோருக்கு தள்ளுபடியாகவும், ரூ. 60 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 40 ஆயிரம், ரூ. 70 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 30 ஆயிரம், ரூ. 80 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 90 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 10 ஆயிரம், அதற்குமேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.
இந்த அறிவிப்பு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தோ்தல் வாக்குறுதிபடி அனைத்து பயிா்க் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது சொற்ப அளவில் கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை தவெக அரசு வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என்றாா்.