FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பரமத்தி அருகே ஆட்டுக்கொட்டகையில் தீ விபத்து

8 செப்டம்பர் 2026, 12:58 am IST
தீ - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே ஆட்டுக்கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதில் ஆடுகளை உடனடியாக வெளியே அவிழ்த்துவிட்டதால் அவை உயிா்த் தப்பின.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூா் அருகே உள்ள கூடச்சேரியை சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). இவா் தனது வீட்டின் அருகில் ஆடுகளைக் கட்டி வைப்பதற்காக கொட்டகை அமைத்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தாா். இந்த நிலையில் திடீரென ஆட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் ஆட்டுக் கொட்டகையில் இருந்த ஆடுகளை அவிழ்த்துவிட்டு வெளியே அனுப்பினா். இதுகுறித்து கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்பு நிலையத்திற்கு காா்த்திகேயன தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் ஆட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் ஆட்டுக்கொட்டகை முழுமையாக எரிந்து சாம்பலானது.

இதேபோல பரமத்தி வேலூா் காவிரி ஆற்றின் கரையில் காசி விஸ்வநாதா் கோயில் எதிரில் உள்ள மின்மயானம் பின்புறம் வனத்துறைக்கு சொந்தமான குட்டுக்காடு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் புகளூா் தீயணைத்துப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments