FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் பரம்பரை தர்மகத்தா எஸ்.டி.ரகுராஜ் தலைமையில் முழக்கத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தைக் காண ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த எட்டுப்பட்டி பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவில் அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், பூங்கரக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளும், சுவாமி சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 16-ஆம் தேதி இரவு வண்டி வேடிக்கையும், 18-இல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடனும் ஆடித்திருவிழா நிறைவு பெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments