மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ஆகம விதிப்படி மீண்டும் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து, கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில், மன்னாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வாழப்பாடியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட மரச்சிற்ப சுவாமி சிலைகளுக்கும் கோயில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.