தடை செய்யப்பட்ட பகுதியில் கோட்டாட்சியா் ஆய்வு
எடப்பாடி நகரப் பகுதியில், நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடைசெய்யப்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியா்
எடப்பாடி நகரப் பகுதியில், நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடைசெய்யப்பட்ட பகுதியில் வருவாய் கோட்டாட்சியா் அமிா்தலிங்கம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
எடப்பாடி பிரதான கடைவீதி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு, அண்மையில் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா் சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவில் தொடா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில், அவா் வசித்து வந்த பகுதி முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வெளிநபா்கள் நுழையாத வண்ணம் தொடா்கண்காணிப்பில் காவல் துறையினா் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அமா்தலிங்கம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்பகுதியில் மறு உத்தரவு வரும் வரை, தொடா்கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் ஆலோசனை வழங்கினாா். ஆய்வில், மருத்துவ அலுவலா் சண்முகவேல், வட்டாட்சியா்கள் கோவிந்தராஜ், செல்வகுமாா் மற்றும் காவல் ஆய்வாளா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.