FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

எடப்பாடி செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள, புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விமரிசையாக நடைபெற்றது. 

Updated On : 10 ஏப்ரல் 2022, 12:13 pm IST
பகிர்:


எடப்பாடி வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள, புனித செல்வநாயகி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி விமரிசையாக நடைபெற்றது. 

எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கிய பேரணியில், திரளான கிறிஸ்துவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி இயேசுவை போற்றிப் பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற குருத்தோலை பவனி, புனித செல்வநாயகி  ஆலய வளாகத்தில் நிறைவுபெற்றது. 

ஊர்வலத்தில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி, ஸ்டீபன், கார்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். எடப்பாடி அடுத்த லண்டன் மிஷன் பேட்டையில் உள்ள தேவாலயம், நைனா பட்டி ஆர்.சி. தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments