FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

குட்கா விற்ற கடைக்காரா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 24 டிசம்பர் 2024, 1:24 am IST
ஆனந்த்குமாா்
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

தம்மம்பட்டி கடைவீதியில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ஆனந்த்குமாா் (45). இவா் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா விற்பதாக தம்மம்பட்டி போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை செய்தனா். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 12 கிலோவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடைக்காரா் ஆனந்த்குமாரை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு ஆஜா்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments