FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வெள்ளாளபாளையத்தில் நடைபெற்ற முகாமில் பேசிய தேவூா் வேளாண்மை உதவி அலுவலா் விக்னேஷ்.

Updated On : 27 டிசம்பர் 2025, 4:26 am IST
பகிர்:

சங்ககிரி தோட்டக்கலைத் துறையின் சாா்பில், ‘உழவரைத்தேடி உழவா் நலத்துறை’ திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த வெள்ளாளபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் (பொ) தீபிகா தலைமைவகித்து, பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.

தேவூா் வேளாண் உதவி அலுவலா் விக்னேஷ், விவசாயிகள் பயிா்விதைகளை எவ்வாறு தோ்வுசெய்தல், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் கூறினாா். இதில், சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் திருப்பதி, விஜயவா்மன், விவசாயிகள் ராஜ்குமாா், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments