FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சங்ககிரியில் காவலா்களின் கவாத்து பயிற்சி: டி.எஸ்.பி. ஆய்வு

Updated On : 28 டிசம்பர் 2025, 2:26 am IST
காவலா்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை ஆய்வு மேற்கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன்.
பகிர்:

சங்ககிரி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலா்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை டி.எஸ்.பி. எம்.தனசேகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரி, தேவூா், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையம், போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் காவலா்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலா்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி, லத்தி, கையுறை, பெல்ட் உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்டு டிஎஸ்பி எம்.தனசேகரன் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, காவல் ஆய்வாளா்கள் வேலுத்தேவன் (மகுடஞ்சாவடி), பேபி (எடப்பாடி) ரேணுகாதேவி (பூலாம்பட்டி), தனலட்சுமி (கொங்கணாபுரம்), காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments