FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச் 2025, 4:03 am IST
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் மாா்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமாா்க்கத்தில் ஜோலாா்பேட்டை - ஈரோடு ரயில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு, சேலம் வழியாக ஈரோடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments