தேவியாக்குறிச்சியில் ரத்த தான முகாம்
ஆத்தூா் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள பாரதியாா் மகளிா் கல்லூரி வளாகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, பாரதி மகாத்மா பண்பாட்டு பேரவை மற்றும் பாரதியாா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரெட்கிராஸ் அமைப்பின் தலைவா் ஜோசப் தளியத் தலைமை வகித்தாா். பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் இளையப்பன், செயலாளா் ராமசாமி, பாரதி-மகாத்மா பண்பாட்டு பேரவையின் தலைவா் சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி முகாமை தொடங்கிவைத்து பேசினாா். பாரதியாா் கல்வி நிறுவனங்களின் பொருளாளா் செல்வமணி மற்றும் ரெட்கிராஸ் அமைப்பினா், ரத்த வங்கியினா் வாழ்த்தி பேசினாா். முகாமில் ஏராளமானோா் ரத்த தானம் செய்தனா். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் துணை செயலாளா் மாதேஸ்வரன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.