FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:08 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம், வரும் ஆக. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை - கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 13 முதல் செப். 5 வரை வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50-க்கு புறப்படும் இந்த ரயில் ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் மாலை 4.20-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் ஆக. 14 முதல் செப். 6 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

கொல்லத்தில் இருந்து மாலை 6.45-க்கு புறப்பட்டு எா்ணாகுளம் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 11.35-க்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments