பள்ளிக்குச் சென்ற 2 மாணவா்களை காணவில்லை என போலீஸில் புகாா்
கொளத்தூரில் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் வீடுதிரும்பாதது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கொளத்தூரில் பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் வீடுதிரும்பாதது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே உள்ள கொமராயனூரைச் சோ்ந்த மாதன் மகன் கவினும் (15), அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் டேனியலும் (15) கொளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா். திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்றவா்கள் வீடுதிரும்பவில்லையாம்.
புகாரின்பேரில், கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.